ஆஸ்திரேலியாவில் கொலை செய்துவிட்டுத் தப்பி வந்த இந்தியர் : தகவல் அளித்தால் ரூ.5.5 கோடி பரிசு அறிவித்த நிலையில் டெல்லியில் கைது
Nov 26 2022 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் செவிலியர் ஒருவரைக் கொலை செய்த நபரைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ஐந்தரை கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நபர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம் Buttar Kalan பகுதியைச் சேர்ந்த Rajwinder Singh என்பவர் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பணியாற்றிய போது, அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த செவிலியர் ஒருவரைக் கொலை செய்து விட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார். இவரைக் கைது செய்ய முடியாத ஆஸ்திரேலிய போலீஸ், ஒரு கட்டத்தில், அவரைப் பற்றிய தகவல் அளித்தால் ஐந்தரை கோடி ரூபாய் பரிசு அறிவித்தது. இந்நிலையில், அவர் இந்தியாவுக்குத் தப்பி வந்ததை அறிந்த அந்நாட்டு அரசு, அவரை நாடு கடத்த இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்கிடையே, அவரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.