ஆக்ரோஷமாகப் பாய்ந்து தாக்கிய பாதுகாப்புப் படையின் நாய் - இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் பகிரும் வைரல் வீடியோ
Nov 26 2022 11:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாதுகாப்புப் படையில் பணியாற்றும் நாய் ஒன்று வேகமாகச் சென்று திருடனைத் தள்ளிவிட்டு ஆக்ரோஷமாகக் கடிக்கும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் ஏராளமான பொதுமக்களால் பகிரப்பட்டு வருகின்றன. உலகின் பெரும்பாலான நாடுகளில் மோப்பம் பிடித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற ஒரு நாய்க்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியும் ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது திருடனைப் போன்று வேஷமிட்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வேகமாக ஓடி வந்த நிலையில், அதிவேகமாகச் சென்ற நாய் அவர் மீது மோதி, அவரைக் கீழே தள்ளிவிட்டு, கடித்துக் குதறியது. இருப்பினும் பாதுகாப்புக் கவச உடைகளை அவர் அணிந்திருந்ததால் எந்த பாதிப்பும் இன்றி அவர் தப்பினார்.