அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி - 6 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Jul 5 2022 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா உருவான 246வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு தொடங்கிய பின்னர் மர்ம நபர் ஒருவர் நுழைந்து, கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு நடத்திய நபர் பிடிபட்டாரா? என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.