அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி - 6 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Jul 5 2022 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா உருவான 246வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு தொடங்கிய பின்னர் மர்ம நபர் ஒருவர் நுழைந்து, கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு நடத்திய நபர் பிடிபட்டாரா? என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00