தென்சீன பகுதியை தாக்கிய சாபா புயல் - கனமழையால் வெள்ளப்பெருக்கு
Jul 4 2022 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்சீன பகுதிகளை தாக்கிய சாபா புயலால் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகிறது. குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்த சாபா புயல், பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசிய காற்றால், பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், குடியிருப்பு பகுதிகள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக பல முக்கிய நகரங்களில் விமான சேவையும் முடங்கியுள்ளது.