சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பில் சிக்கி மூழ்கும் வர்த்தக கப்பல் : 27 பணியாளர்கள் மாயம்
Jul 4 2022 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாங்காங் அருகே தென்சீனக்கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக மூழ்கிய கப்பலில் இருந்த 27 பணியாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாபா புயல் காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கிய வர்த்தக கப்பல், கடலில் மூழ்கி வருகிறது. அதில் இருந்த மூன்று பணியாளர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 27 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர். காற்று வேகமாக வீசுவதால் மீட்பு பணி கடும் சவாலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.