இலங்கை​யில் தொடரும் மாணவர்கள் போராட்டம் : அதிபர் மாளிகை நோக்‍கி செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் கலவரம்

May 20 2022 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக ​கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்தனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்‍கடி ஏற்பட்டதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சேவுக்‍கு எதிராக திரண்ட மக்‍கள், அவரின் பூர்வீக வீட்டை தீ வைத்து கொளுத்தினர். கடும் நெருக்‍கடி ஏற்பட்டதையடுத்து மகிந்த ராஜபட்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்‍ர​மசிங்கே பதவியேற்றுக்‍கொண்டார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபட்சேவும் பதவி விலக கோரி பொதுமக்‍கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கோத்தபய ராஜபட்சேவுக்‍கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர். அதிபர் மாளிகை நோக்‍கி பேரணி​ செல்ல முயன்ற அவர்களை போலீசார், கண்ணீர் புகை குண்டுவீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00