இலங்கையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் : அதிபர் மாளிகை நோக்கி செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தியதால் கலவரம்
May 20 2022 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி கலைத்தனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சேவுக்கு எதிராக திரண்ட மக்கள், அவரின் பூர்வீக வீட்டை தீ வைத்து கொளுத்தினர். கடும் நெருக்கடி ஏற்பட்டதையடுத்து மகிந்த ராஜபட்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். ஆனால் அதிபர் கோத்தபய ராஜபட்சேவும் பதவி விலக கோரி பொதுமக்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், கோத்தபய ராஜபட்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதிபர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்களை போலீசார், கண்ணீர் புகை குண்டுவீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைத்தனர்.