அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு
May 19 2022 2:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நிதிபற்றாக்குறை, பணவீக்கம், என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று சிறப்பு கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அத்தியாவசியமற்ற மற்றும் ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு எடுக்கப்பட்டது.