உக்ரைன் போரில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் சரணடைந்ததாக ரஷ்யா அறிவிப்பு
May 18 2022 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி 3 மாதங்களை நெருங்கும் நிலையில், கடந்த சில நாட்களாக அசாவ்ஸ்டோல் உருக்காலையை இலக்காகக் கொண்டு கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கிடையே, அசாவ் படைப்பிரிவைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வந்ததாகவும், அவர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்தால் கொலை செய்யப்படும் ஆபத்து இருப்பதாகவும், குடும்பத்தினரும் உறவினர்களும் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வீரர்களின் விடுதலைக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், போப் பிரான்சிஸ் போன்ற உலகின் முக்கியப் பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர். ஆனால், அசாவ்ஸ்டோல் உருக்காலைக்குள் சிக்கியிருந்த வீரர்கள் உள்ளிட்ட 959 பேர் தற்போது சரணடைந்திருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.