வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
May 16 2022 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வட கொரியாவில் கடந்த மூன்று நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்களில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், ஒருவர் மட்டுமே மரணமடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி வெற்றிகரமாக கையாண்டார்கள் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதிகாரிகள் செயல்பட வேண்டும் என அதிபர் கிம் ஜாங் அன் அறிவுறுத்தியுள்ளார்.