கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 'வெசாக்' பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் இலங்கை மக்கள்
May 16 2022 8:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கையில் வாழும் புத்த மதத்தினர், 'வெசாக்' பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
புத்தர் பெருமான் பிறந்தது, ஞானமடைந்தது மற்றும் இறந்தது என மூன்று முக்கிய நிகழ்வுகளும் வெசாக் மாதத்து பவுர்ணமி நாளிலேயே நிகழ்ந்தது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் இலங்கையில், புத்த மத மக்கள், பவுர்ணமி தினத்தை வெசாக் பண்டிகையாக மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தற்போது பொருளாதார நெருக்கடியால், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் வாழும் புத்த மதத்தினர், 'வெசாக்' பண்டிகையை, ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.