இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - 13 பேர் உயிரிழப்பு - 90-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
Dec 5 2021 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவில் Semeru எரிமலை வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனேசியாவின் மக்கள் பெருக்கம் நிறைந்த ஜாவா தீவில் அமைந்துள்ள Semeru எரிமலை நேற்று வெடித்து சிதறியது. நெருப்புக் குழம்பு மற்றும் சாம்பல் எல்லா திசைகளிலும் வெளியேறியது. தீப்பிழம்பால் சுற்றியிருந்த கிராமங்களில் பல வீடுகள் தீக்கிரையாகின. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 98 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எரிமலை தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து 902 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.