இந்தோனேஷியாவை 2 நாட்களாக நிலவும் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்
Dec 5 2021 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேஷியாவில் இன்று காலை மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நேற்று ஒரே நாளில், மூன்று முறை நில நடுக்கங்கள் உணரப்பட்டன. மலுக்கு என்ற இடத்தில் நேற்று காலை மற்றும் பிற்பகலில் 2 முறையும், இரவில் அசே என்ற இடத்தில் ஒருமுறையும் நில நடுக்கம் உணரப்பட்டது. இதன்தொடர்ச்சியாக இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹல்மஹிரா தீவில், டொபேலோ என்ற இடத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6-ஆக பதிவாகியிருப்பதாக, அமெரிக்கப் புவிவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் அடுத்தடுத்த நில நடுக்கங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.