ஸ்பெயினில் ஒரு மாதமாக தொடரும் எரிமலை சீற்றத்தால் தீப்பிடித்து எரிந்த வீடுகள்
Oct 19 2021 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயினின் லா பால்மா தீவில் உள்ள எரிமலையில் இருந்து வெளியேறி வரும் நெருப்புக்குழம்பினால், ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
லா பால்மா தீவில் உள்ள கும்ரே வியாஜா எரிமலை, கடந்த மாதம் 19-ம் தேதிடில் இருந்து நெருப்புக்குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால், 700 ஹெக்டேருக்கும் மேற்பட்ட பரப்பளவிலான விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த வாரம் லா பால்மா தீவில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டது. எரிமலையில் இருந்து நெருப்புக்குழம்பு தொடர்ந்து வெளியேறி வருவதால், ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.