மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் - ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தும் போலீசார்
Oct 16 2021 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய போலீசார் அந்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த பார்சல் ஒன்றின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நிலத்தில் பதிக்கப்படும் டைல்ஸ் எனக்குறிப்பிடப்பட்டிருந்த அந்த பார்சல் சுமார் 450 மதிப்புடையது என்ற நிலையில், அதை உடைத்து போலீசார் சோதனையிட்டனர். இச்சோதனையில், அந்த பார்சலில் இருந்தது ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் என்றும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு தொழில் அதிபரின் பெயருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவரைக் கைது செய்து விசாரணை நடத்தும் போலீசார், ஆஸ்திரேலிய வரலாற்றில் இது வரை இந்த அளவிலான போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதில்லை என்றும், இவற்றின் மதிப்பு சுமார் 800 கோடி ரூபாய் என்றும் அறிவித்துள்ளனர்.