ஸ்பெயின் நாட்டில் 27 நாட்களாகச் சீறும் எரிமலை : நெருப்பு ஆறாக ஓடும் குழம்பு - மேலும் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இடமாற்றம்
Oct 16 2021 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயின் நாட்டின் லா பால்மா எரிமலை 27வது நாளாக தொடர்ந்து ஏராளமான தீ பிழம்புகள், உருகிய பாறைக்குழம்புகள், மற்றும் கற்களை வெளியேற்றிவருகிறது.
ஸ்நாட்டின் கேனரி தீவுகளில் ஒன்றான லா பால்மாவில் 50 ஆண்டுகள் அமைதியாக இருந்த கும்ப்ரே வியஜா எரிமலை கடந்த 26 நாட்களுக்கு முன் வெடித்து ஏராளமான குழம்பு மற்றும் கற்களை பீய்ச்சியடித்தது. இந்த எரிமலையிலிருந்து வெளியேறிய குழம்பு, நெருப்பு ஆறாக ஓடி ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் வீடுகளை எரித்து நாசமாக்கியது. இதனால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவற்றில் பற்றி தீ, மேலும் பல பகுதிகளுக்கும் பரவிய நிலையில், மேலும் பெருக்கெடுத்து ஓடிய நெருப்பு ஆறு, அருகில் உள்ள அட்லான்ட்டிக் கடலிலும் கலந்தது. இதுவரை வெளியேறிய எரிமலைக்குழம்பு, சுமார் 600 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவி, இருகி பாறைகளாக மாறியுள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் சீறி வரும் எரிமலை ஏராளமான குழம்பை வெளியேற்றிவருகிறது. இதனால் மேலும் பலநூறு வீடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுடன் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.