இந்தோனேசியாவின் பாலி தீவில் 4.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் - நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு
Oct 16 2021 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஏற்பட்ட 4.8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாலி தீவின் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இரண்டு மாவட்டங்களில் உணரப்பட்டதாகவும் இந்தோனேசியா அறிவித்துள்ளது. இதே போல் அருகில் உள்ள Lombok தீவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை இணைக்கும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நிவாரணங்களை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில், அனைவரையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்துவிட்டதாக இந்தோனேசியா அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் பாலி தீவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, 18 மாதங்களுக்குப் பின் நேற்று முன்தினம் விலக்கப்பட்ட நிலையில் நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது.