பிலிப்பைன்சில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு - காணாமல் போன 13 பேரை மீட்கும் பணி தீவிரம்
Oct 15 2021 2:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிப்பைன்சில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 13 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வடக்கு பிலிப்பைன்சில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு பலவான் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் காணாமல் போன 13 பேரை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளை இழந்து தவிக்கும் மக்களை மீட்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.