பிலிப்பைன்ஸ் நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால் வெள்ள அபாயம் - பொதுமக்களை பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யும் அரசு
Jul 24 2021 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி, பெல்ஜியம், சீனா போன்ற நாடுகளில் பலத்த மழை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் தலைநகர் மணிலா மற்றும் சுற்றுப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் பெருமழை பெய்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது போல் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அந்நாட்டு அரசு இடமாற்றம் செய்துவருகிறது.