கனடாவில் மோசமான வானிலை : 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ
Jul 22 2021 8:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவில் மோசமான வானிலை காரணமாக 300-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
மத்திய பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லிட்டனில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இந்தச் சூழலில், வறண்ட வானிலை காரணமாக அங்குள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. வனப்பகுதி அருகே இருந்த 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 90 சதவிகிதம் அளவுக்கு வீடுகள், குடியிருப்பு பகுதிகள் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு பேரிடர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட இடங்களில் அவசரநிலை பிரகடனம் 14 நாட்கள் அமலில் இருக்குமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.