சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் வரலாறு காணாத மழை : 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிப்பு
Jul 22 2021 8:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹென்னான் மாகாணத் தலைநகர் செங்சவ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான மழை கொட்டித்தீர்த்தது. ஓராண்டில் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்தது என்று அஞ்சும் அளவுக்கு மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்த மழை பாதிப்பில் சிக்கி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரங்கப் பாதைகளில் வெள்ளத்தில் சிக்கிய 500க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெள்ள பாதிப்பு காரணமாக பொதுமக்களில் இரண்டரை லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மேலும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை முன்னறிவுப்பு மையம் எச்சரித்துள்ளது.