சிங்கப்பூரில் நாளை முதல் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் - ஜூன் 15-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்
May 15 2021 11:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், நாளை முதல் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. இதனால், தேவையான பொருட்களை வாங்க, பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கடைகளில் குவிந்தனர்.
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு, மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. நாளை தொடங்கி, ஜூன் மாதம் 15-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் பொதுமக்களை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது. குடும்ப விழாக்களில் 2 பேருக்கும் அதிகமானோர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதையொட்டி உள்நாட்டு செலாவணியின் மதிப்பும், பங்கு வர்த்தகமும் 11 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் பெரும் சரிவை சந்தித்துள்ளன.