கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் 2-வது முறையாக ரத்து
Apr 19 2021 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சம் காரணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த ஜனவரி மாதம் டெல்லி வருகை தர இருந்தார். அப்போது, பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா பரவத் தொடங்கியதால் இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார். அப்பயணம் இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. வரும் 26-ம் தேதி முதல் 4 நாட்கள் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம் வகுக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவில் தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால், போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என பிரிட்டனின் தொழிலாளர் கட்சி வலியுறுத்தியது. இந்நிலையில், போரிஸ் ஜான்சினின் இந்திய பயணம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.