அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது - தனிநபர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அதிபர் ஜோ பைடன் முடிவு
Apr 17 2021 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருப்பதாகவும், இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இண்டியானா மாநிலத்தின் இண்டியானாபொலிஸ் நகரில் உள்ள வணிக வாளகத்துக்கு வந்த நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். பின்னர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட அவருடன் சேர்த்து 8 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. நாடு முழுவதும் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 12 ஆயிரத்து 395 பேர் இதுபோல் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தனிநபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.