கொரேனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளதாக லான்சென்ட் ஆய்வில் தகவல்
Apr 16 2021 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரேனா வைரஸ் பெருந்தொற்று காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் உள்ளதாக, லான்சென்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ இதழான லான்செட், கொரோனா பரவுவது குறித்து ஆய்வு நடத்தியது. இதில், பிரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் வேதியியலாளர் ஜோஸ் லூயிஸ் ஜிமெனெஸ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். ஆய்வில், நீர்த்துளிகள் மூலம் கொரோனா பரவுகிறது என்பதற்கு எந்தச் சான்றுமில்லை என்றும், காற்றின் மூலம் தான் கொரோனா பரவுகிறது என்பதற்கு, உறுதியான சான்றுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் மூலம் பரவும் கொரோனாவால், ஒரே நேரத்தில் 53 பேர் பாதிக்கப்படுவதாகவும், அறிகுறிகள் இல்லாத நபர்களிடமிருந்து பரவும் தொற்றால், 40 சதவீதம் பேர் உலகெங்கும் பாதிக்கப்படுவதாகவும், இதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில், உலக நாடுகள் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.