தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் ஒருவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை - ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அறிவிப்பு
Apr 13 2021 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் ஒருவருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் முயற்சிகளை அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனீகா நிறுவனம் தயாரித்து அளிக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் மிகவும் அரிதாக ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுந்தது. ஆஸ்திரேலியாவில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் தற்போது இரண்டாவது நபருக்கு இது போன்ற பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசிக்குப் பதிலாக ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் பெருமளவு பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது.