மொசாம்பிக் நாட்டில் பெய்த பலத்த மழை - பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றம்
Jan 25 2021 6:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியப் பெருங்கடலில் உருவான Eloise புயல் காரணமாக ஆஃப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் சூறாவளிக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஏற்கெனவே வெள்ள பாதிப்பில் சிக்கித் தவித்த அந்நாட்டின் மையப் பகுதிகளில் மணிக்கு 150 முதல் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான விளை நிலங்களில் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி வீணாகின. Beira நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது. பலத்த காற்றில் சிக்கி ஏராளமான குடியிருப்புக் கட்டடங்கள் சேதமாகின. இதனால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.