அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை சம்பவம் - முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான தகுதி நீக்கத் தீர்மானம் மீது பிப்ரவரி 9-ம் தேதி முதல் விசாரணை
Jan 23 2021 2:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான பதவிநீக்கத் தீர்மானம் மீது வரும் பிப்ரவரி மாதம் 9-ம் தேதி முதல் விசாரணை நடைபெற உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். தோல்வியை ஏற்க மறுத்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அமெரிக்க வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதில்லை. இந்நிலையில், இதற்கு பொறுப்பேற்று வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்தனர்.
ட்ரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு அவரது ஆதரவாளர்களே ஆதரவு தெரிவித்ததை அடுத்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அத்தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, ட்ரம்ப் மீதான பதவிநீக்க தீர்மானத்தின் மீது, வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பதவிநீக்க தீர்மானத்தின் மீது அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.