ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அடுத்தடுத்து நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல் - 32 பேர் உடல் சிதறி உயிரிழந்த பரிதாபம்
Jan 22 2021 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அடுத்தடுத்து நடைபெற்ற 2 மனித வெடிகுண்டு தாக்குதல்களில், 32 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள பாப்-அல்-ஷராகி மார்க்கெட், நேற்று வழக்கம் போல் பரபரப்புடன் செயல்பட்டது. அப்போது, அங்கு வந்த இருவர், தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை, அடுத்தடுத்து வெடிக்கச் செய்தனர். இதனால், மார்க்கெட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது மக்கள் பீதியடைந்து அங்கும் இங்கும் சிதறி ஓடினர். இந்த தாக்குதல்களில், 32 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 73க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.