கொரோனா நோயாளியை அலட்சிய போக்குடன் கையாண்டதற்கு கடும் எதிர்ப்பு : மங்கோலியா பிரதமர் ராஜினாமா
Jan 22 2021 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மங்கோலியாவில் கொரோனா நோயாளிகளை கையாளுவதில் ஏற்பட்ட குளறுபடியால் போராட்டம் வெடித்த நிலையில், அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நடுவே அமைந்துள்ள குட்டி நாடு மங்கோலியா. கடந்த நவம்பர் மாதம் மங்கோலியாவில் உள்நாட்டிலும் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக் கணக்கான மக்கள் தலைநகரில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண், அவரது குழந்தையுடன் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கி, கொரோனா வார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அப்போது அங்கு மைனஸ் 25 டிகிரி வெப்ப நிலை நிலவியுள்ளது. இருப்பினும், அந்த தாய்க்கு முறையான பாதுகாப்பு உடைகள் வழங்கப்படவில்லை. இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, மங்கோலியாவில் மிகப் பெரியளவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது. இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத்தொடர்ந்து, இன்று அந்நாட்டின் பிரமதர் குரேல்சுக் உக்னா ராஜினாமா செய்தார். இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத்தொடர்ந்து, இன்று அந்நாட்டின் பிரமதர் குரேல்சுக் உக்னா ராஜினாமா செய்தார்.