போர்ச்சுக்கல் நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதால் கட்டுப்பாடு - நகரங்களுக்கு இடையே பயணம் செய்யத் தடை
Nov 28 2020 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் நகரங்களுக்கு இடையே பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லிஸ்பன் நகரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வாகன சோதனை, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடங்கின. டிசம்பர் முதல் தேதி பொதுவிடுமுறை என்பதால், நகரங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி அதிகாலை வரை இத்தடைகள் அமலில் இருக்கும் என்றும் போர்ச்சுக்கல் அரசு அறிவித்துள்ளது.