சீனாவின் ஹாங்காங் நகரில் ஒரே நாளில் 92 பேருக்கு புதிதாக நோய் தொற்று - பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி உத்தரவு
Nov 27 2020 7:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஹாங்காங் நகரில், ஆகஸ்ட் மாதத்துக்குப் பின் ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நடனவிடுதி ஒன்றில் இருந்து தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஏற்கெனவே பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஹாங்காங்க் அரசு மேற்கொண்டது. அதன்படி, இரவு விடுதிகள், பொழுதுபோக்கு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறிந்து வைரஸ் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.