காங்கோ நாட்டுச் சிறைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த தீவிரவாதிகள் - 1,300 கைதிகளை விடுவித்து அழைத்துச் சென்றனர்
Oct 21 2020 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கோ நாட்டுச் சிறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் ஆயிரத்து 300 கைதிகளை சட்டவிரோதமாக விடுதலை செய்தனர். பெனி நகரில் உள்ள காங்பேயி மத்திய சிறையில் ஆயிரத்து 456 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மத அடிப்படைவாத குற்றங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள். இந்நிலையில், இந்தச் சிறைச்சாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள், 110 பேரைத் தவிர அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்தனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.