வியட்னாமில் மீண்டும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு - மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்ட அரசு
Oct 21 2020 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வியட்னாமில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்ததால் நாடு முழுவதும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக நாட்டின் மத்திய பகுதியில் பெய்த பெருமழை காரணமாக பல கிராமங்கள் மற்றும் நகரப் பகுதகளை மழை நீர் சூழ்ந்தது. எங்கு பார்த்தாலும் 4 முதல் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியதால் பொதுமக்கள் வீடுகளின் மேற்கூரை மீது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சாடெல் புயல் காரணமாக மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மீட்பு மற்றம் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.