இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம் - இன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் எனத் தகவல்
Aug 6 2020 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
அண்டை நாடான இலங்கையில் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 7 ஆயிரத்து 500 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் தங்கள் வாக்கை செலுத்தினர். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இத்தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 66 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.