செப்டம்பர் 15-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்று விடுங்கள் - இல்லையேல் தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
Aug 4 2020 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டிக்டாக் செயலியின் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15ம் தேதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் அதற்கு தடை விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப் போரில் தொடங்கிய அமெரிக்க - சீன மோதல், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தன. இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக, சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.