காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் : புதிதாக எச்சரிக்கைவிடுத்துள்ள மருத்துவ வல்லுனர்கள்
Jul 8 2020 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதை மறுக்க முடியாது என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ், சளி, எச்சில் போன்றவற்றின் நீர்திவாளைகள் வழியாக பரவுவதாக ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றின் மூலம் வெளியேறும் கொரோனா வைரஸ், காற்றில் மிதக்கும் தன்மையுடையதா என்பது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது. இதற்கிடையே, நெருக்கடி நிறைந்த சிறிய ரக அறைகள், ஜன்னல் வசதியில்லாத அறைகள் மற்றும் காற்று புகாத அறைகளில், கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் ஆபத்து உள்ளதாகவும், அதனால் அது போன்ற சூழ்நிலைகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என உலக சுகதார அமைப்பின் வல்லுனர்கள் சிலர் எச்சரித்துள்ளனர். இது உண்மை என தெரியவரும்போது, கொரோனா வைரஸ் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் வரும் என கருதப்படுகிறது. இருப்பினும், இந்த எச்சரிக்கை குறித்து பொதுமக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்பதையும், கவனத்துடன் செயல்படவேண்டும் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.