அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய சுதந்திர தின விழா : கொரோனா எச்சரிக்கையை மீறி ஏராளமானோர் பங்கேற்பு
Jul 5 2020 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் சுதந்திர தின விழாவை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை நான்காம் தேதியன்று சுதந்திர தினகொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்விழாவில் பட்டாசுகள் வெடிப்பது, மகிழ்ச்சி ஊர்வலங்கள் நடத்துவது என பலவித நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால் இக்கொண்டாட்டங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரிலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை மீறி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இவ்விழாவினை நடத்தியுள்ளார். வண்ணமயமாக நடைபெற்ற இவ்விழாவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மனைவி மெலானியாவுடன் சேர்ந்து பால்கணியிலிருந்தபடி இவ்விழாவை கண்டுகளித்தார்.