டோக்கியோ நகர ஆளுநரைத் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு : பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
Jul 5 2020 1:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ நகர ஆளுரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வாக்களித்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் அளுனர் பதவிக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தற்போதைய ஆளுனருக்கு இது பின்னடைவைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், Yuriko Koike தான் மீண்டும் வெற்றிபெறுவார் என கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. டோக்கியோவின் முதல் பெண் ஆளுனராகப் பதவியேற்ற Yuriko Koike, கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக நடந்துகொண்டதால் இந்த ஆண்டில் அவரது செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர்.