கொரோனா வைரஸ் விவகாரத்தில் தவறான தகவல்கள் தெரிவிக்‍கப்பட்டன - உலக சுகாதார நிறுவனம் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

Apr 9 2020 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ், மனிதர்கள் மூலம் பரவாது என்பது உள்ளிட்ட தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக அமெரிக்‍க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா விவகாரத்தில் சீனாவுக்‍கு ஆதரவாக நடந்து கொண்டதாக, உலக சுகாதார நிறுவனம் மீது டொனால்டு ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த உலக சுகாதார நிறுவனம், கொரோனா விவகாரத்தை அரசியலாக்‍க வேண்டும் என கூறியது.

இந்நிலையில், கொரோனா வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்‍கு பரவாது என்று கடந்த ஜனவரி 14-ம் தேதி சுகாதார நிறுவனம் தெரிவித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்‍கு அமெரிக்‍கா தடை விதிக்‍கப்போவதாக தெரிவித்த போது, அதனையும் அந்த நிறுவனம் விமர்சித்ததாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா குறித்து நிறைய தகவல்கள் தெரிந்தும், அதனை தெரிவிக்‍காமல், பெரும் தவறை உலக சுகாதார நிறுவனம் செய்துவிட்டதாகவும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00