கொரோனா சிகிச்சைக்காக, 34 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை இலவசமாக வழங்க முடிவு - அமெரிக்க இந்திய வம்சாவளி மருந்து நிறுவனம் தகவல்
Apr 8 2020 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க மக்களின் கொரோனா சிகிச்சைக்காக 34 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை இலவசமாக வழங்க, அந்நாட்டிலுள்ள இந்திய வம்சாவளி மருந்து நிறுவனம் முன்வந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கேட்டு பெற்று வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும் என அதிபர் ட்ரம்ப் கூறும், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை இலவசமாக தயாரித்து வழங்க, அந்நாட்டிலுள்ள இந்திய வம்சாவளி நிறுவனம் முன்வந்துள்ளது. இந்திய வம்சாவளியினரான சிராக் மற்றும் சிந்து பட்டேல் இணைந்து நடத்தும் அம்னியல் ஃபார்மா நிறுவனம், நியூஜெர்சியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பாக, தற்போது 34 லட்சம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்படும் என்றும், இம்மாத மத்தியில் சுமார் 2 கோடி மாத்திரைகள் தயாரித்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.