கிரீஸ் நாட்டில் விதவிதமான சாக்லேட்டுகளைத் தயாரிக்கும் பேக்கரி உரிமையாளர் - ஈஸ்டர் பண்டிகைக்காக விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு
Apr 8 2020 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் அச்சத்திற்கு இடையே, கிரீஸ் நாட்டு பேக்கரி உரிமையாளர் ஒருவர் கோவிட் 19 வைரஸ் தொடர்பான சாக்லேட்டுகளை தயாரித்து விற்பனைக்கு தயாராகியுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகைக்காக இதுபோன்ற சாக்லேட்டுகளைத் தயாரித்துள்ளதாக கிரீஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள தெஸ்ஸலோனிகி நகரைச் சேர்ந்த மரியோஸ் தெரிவித்துள்ளார். கோவிட் 19 வைரசின் உருவம், தடுப்பு மருந்து மற்றும் ஊசிகளைப் போன்ற சாக்கொலேட்டுகளும் இவரது கைவண்ணத்தில் உருவாகியுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு, பொருளாதார இழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் ஈஸ்டர் பண்டிகையின் போது இந்த சாக்கட்டுகள் விற்பனைக்கு வரும் என்கிறார் மரியோஸ்.