இத்தாலியில் கொரேனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம் : புதிய ஆய்வுகளின் மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்
Apr 6 2020 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைப் போன்று இரண்டு மடங்காக இருக்கும் என தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தாலி நாட்டில் லம்பார்டி மற்றும் வடபகுதியில் உள்ள பெர்காமோ மாகாணத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், நோய் பாதிக்கப்பட்டும் மருத்துவமனைக்குச் செல்லாதவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏராளமான முதியவர்கள் காய்ச்சலால் அவதிப்படுவதாக மருத்துவமனைக்குத் தெரிவித்திருந்தும் யாரும் அவர்களின் மீது அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது பூதாகரமாக உருவாகிவருகிறது.