உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து ரஷ்ய வீரர் கின்னஸ் சாதனை
Feb 29 2020 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து, கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார், ரஷ்ய நீச்சல் வீரர் ஒருவர்.
ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீரர், அலெக்ஸி மோல்சனோவ் (Alexey Molchanov). நீச்சலில் புதுமையாக சாகசம் செய்ய நினைத்த அவர், உறைந்த நீருக்கடியில் நீந்தி சாதனை படைக்க தீர்மானித்தார். உறைந்த நீருக்கடியில் நீந்துவது சவாலான காரியம் மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. ஆனாலும், துணிச்சலுடன் களமிறங்கிய அலெக்ஸி, தனது சாதனை முயற்சியை மாஸ்கோவில் மேற்கொண்டார்.
அங்கு, பனிப்படலங்களுக்கு மத்தியில் உறைந்த நீரில் குதித்த அலெக்ஸி, மூச்சைப் பிடித்துக்கொண்டு நீச்சலடித்தார். விபரீதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக, அவரது அணியினரும், ட்ரோன் கேமரா கண்காணிப்பு வளையத்திற்குள் சென்றனர். குளிர்ந்த நீரில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் அலெக்ஸி. வெறும் 3 நிமிடத்தில், அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அலெக்ஸியின் இந்த சாதனை, கின்னஸிலும் இடம்பெற்றுள்ளது.
நீருக்குள் மூச்சைப்பிடித்து நீச்சலடிப்பது எப்படி என்பது குறித்து, அலெக்ஸி-க்கு, அவரது தாயார்தான் கற்றுக்கொடுத்தார். அப்படியொரு தருணத்தில்தான் அலெக்ஸியின் தாய் உயிரிழந்தார். எனவே, தன்னுடையை இந்த சாதனையை, தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் அலெக்ஸி.