கொரோனா வைரஸை தடுக்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
Feb 19 2020 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு அரசின் மேலான சிகிச்சை முறைகளால், வைரஸ் தாக்குதலுக்குள்ளான பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், சீன சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் சிறப்பானது என என உலக சுகாதாரத்துறை அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் கிசிக்கை அளிக்கும் அளவுக்கு, உயர்தர மருத்துவ தொழில்நுட்பங்களை சீன அரசு கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.