ஜப்பான் கப்பலில் இருந்து வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகள் 14 நாட்களுக்கு பின் வெளியேற்றம்
Feb 19 2020 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 'டைமண்ட் பிரின்சஸ்' கப்பலில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் 14 நாட்களுக்கு பின் அங்கிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். 14 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் கப்பலில் உள்ள பயணிகள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பயணிகள் தரையிறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டவர்கள் இன்று வெளியே கொண்டுவரப்பட்டனர். கொரோனா தொற்று இல்லாத சுமார் 500 பயணிகள் வரை கப்பலில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.