ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் மேலும் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு - பாதிப்புக்கு உள்ளான இந்தியர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரிப்பு

Feb 18 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில், மேலும் இரண்டு இந்தியர்களுக்கு 'கொவைட்-19' பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன், கொரோனா பாதிப்புக்குள்ளான இந்தியர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில், கடந்த 17-ம் தேதி நிலவரப்படி புதிதாக 99 பேருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 454-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 4 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் இரண்டு இந்தியர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் கப்பலில் தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக்‍ கப்பலில் 138 இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்து 711 பேர் உள்ளனர்.

இதனிடையே, சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்‍குதலுக்‍கு பலியானவர்களின் எண்ணிக்‍கை ஆயிரத்து 800-ஐ கடந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00