ஜப்பான் சொகுசு கப்பலில் 355 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு : ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
Feb 17 2020 10:02AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில், மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 700 பயணிகளுடன் ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய சொகுசு கப்பலில், 60-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, கப்பலில் வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி சொகுசு கப்பலில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இந்த நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் மேலும் 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கப்பலில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது.