முடிவுக்கு வந்தது அமெரிக்கா - சீனா வர்த்தக போர் : அதிபர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
Jan 16 2020 10:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வர்த்தக போரை நடத்தி வந்த அமெரிக்கா - சீன நாடுகள், தற்போது பரஸ்பரம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி மோதல் போக்கை முடிவுக்குகொண்டு வந்துள்ளன.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக மோதல் நடந்து வந்தது. இருநாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான விதிகளை விதித்தன. ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கா - சீனா இடையிலான சந்திப்பின் போது, வரிவிதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, அந்த நாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது. வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.