சீனாவில் புத்தாண்டு விடுமுறைக்காலப் பயணங்கள் அதிகரித்து வருவதால் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு
Jan 13 2020 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் புத்தாண்டு விடுமுறைக்காலப் பயணங்கள் அதிகரித்து வருவதால் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு பிறக்கும் போது வசந்தகாலக் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. இதையொட்டி நீண்ட விடுமுறை அளிக்கப்படுவதால் கோடிக்கணக்கான பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்குவார்கள். உலகிலேயே மிகப்பெரிய மனித இடப்பெயர்ச்சியாக இது கருதப்படுகிறது. தற்போது விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் ரயில்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.