சிரியா எல்லை வழியாக துருக்கி நாட்டிற்குள் ஊடுருவ ISIS தீவிரவாதிகள் முயற்சி - எல்லைப் பகுதியில் நிலவும் கடுமையான சண்டையால் பதற்றம்
Sep 26 2014 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிரியா எல்லை வழியாக துருக்கி நாட்டிற்குள் ஊடுருவ ISIS தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதால், எல்லைப் பகுதியில் கடுமையான சண்டை நிலவுகிறது.
ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள ISIS தீவிரவாதிகள், தற்போது சிரியா எல்லை வழியாக, துருக்கி நாட்டிற்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து முன்னேறி வரும் அவர்களை, தடுத்து நிறுத்த குர்து படையினரும், துருக்கி நாட்டு வீரர்களும் களமிறங்கியுள்ளனர். அப்பாவி பொதுமக்களை சிறைபிடித்து, கொடூரமாகக் கொலை செய்யும் தீவிரவாதிகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என எல்லையோர மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், துருக்கி நாட்டிற்குள் ஊடுருவ முயற்சிக்கும் ISIS தீவிரவாதிகளை விரட்டும் பணியில், அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வருகிறது.